சமுதாயத்தில் வளர்ந்துள்ள கயவர்களின் செல்வாக்கினையும், போலி அரசியல்வாதிகளின் வெறுக்கத்தக்க முன்னேற்றத்தை ஒழிக்க வேண்டும்- மு.வரதராசனார் !

Sunday, December 18, 2011

பொது அறிவு-2


ம்மைச் சுற்றிலும் காற்று இல்லாவிடில், எவ்வளவு உரத்த ஒலியானாலும் நம்மால் அதனைக் கேட்க இயலாது. நீர்வாழ் உயிரினங்களின் காதுகள் தண்ணீர் அலைகளின் ஊடே வரும் ஒலியைக் கேட்கும் வண்ணம் அமைந்துள்ளன. ஆனால் மனிதர்களின் செவிப்பறைகள் காற்று அல்லது வாயுக்களின் ஊடே வரும் ஒலியை மட்டுமே கேட்கும் வண்ணம் அமைந்து உள்ளவை. எனவே நம்மைச் சுற்றிக் காற்றோ, புகையோ இல்லாத நிலையில் நம் காதுகளுக்கு ஒலியைக் கேட்கும் ஆற்றல் கிடையாது.நாம் சாதாரணமாகக் கேட்கும் ஒலி நம்மைச் சுற்றியுள்ள காற்று, புகை ஆகியவை ஊடே பயணம் செய்து வரும் ஒலி அலைகளால் உண்டாகின்றவை. இந்த ஒலி அலைகள் ஒரு பொருளின் அதிர்வினால் உண்டாகின்றவை. இந்த அடிப்படை உண்மைகள் புரிந்து கொள்ளப்பட்டு விட்டால் ஒலியின் உண்மைகள் பற்றியும், அதன் புதிர்கள் பற்றியும் தெளிவாக அறிந்துகொள்ள இயலும்.


           


ஒரு பொருளின் ஒவ்வொரு அதிர்வும் காற்றின் ஒலி அலைகளை உருவாக்குமா, அவற்றை நாம் ஒலியாகக் கேட்க இயலுமா? இவ்வினாவின் முதற் பகுதிக்குஆம்எனவும், இரண்டாம் பகுதிக்குஇல்லைஎனவும் விடையளிக்க வேண்டும். நாம் ஒலியைக் கேட்பதற்கு, ஒரு பொருளால் உண்டாக்கப்படும் அதிர்வுகளும், அவ்வதிர்வுகளால் காற்றில் உண்டாகும் ஒலி அலைகளும் குறைந்த அளவு நொடிக்கு 16 அதிர்வுகளை, அதாவது அதிர்வெண்ணைக் கொண்டிருக்க வேண்டும். இதற்கும் குறைவாக அதிர்வெண் இருப்பின், அந்த ஒலியைக் கேட்க இயலாது,

இதனால் ஒலி அலைகளது அதிர்வெண்களின் எல்லை 0 இலிருந்து எல்லையற்ற முடிவிலி (
infinity) ஆக இருக்க முடியும் என நினைக்கக் கூடாது. உண்மையில் அதிர்வுகளின் ஒரு வரம்பிலும் அதற்கு மேற்பட்ட நிலையிலும் ஒலி நமக்குக் கேட்கும்; மற்றொரு வரம்பில் காற்றில் அதிர்வுகள் தாமே உருவாக இயலாத நிலை.இந்த வரம்பு கேட்கும் வரம்பு (
hearing limit)” என அறிவியல் மொழியில் கூறப்படும். இவ்வரம்பு எல்லையின் முடிவு நொடிக்கு 20,000 அதிர்வுகளாகும். அதாவது இதற்கு மேற்பட்ட அதிர்வெண் நிலையில் நம்மால் ஒலியைக் கேட்க இயலாது.எனவே கேட்கும் திறனின் எல்லை நொடிக்கு 16 அதிர்வுகளிலிருந்து 20,000 அதிர்வுகள் ஆகும்; இவை முறையே தாழ் ஒலி (
infrasonic), மிகை ஒலி (ultra-sonic) என அழைக்கப்படுகின்றன.
ஒலி விரைவு பற்றி முதன்முதலாக ஆர்வம் காட்டியவர், பிரிட்டனைச் சேர்ந்த சர் ஐசக் நியூட்டன் ஆவார். அவர் தமது முதல் ஆய்வை 1686இல் மேற்கொண்டார். மின்னலின் ஒளிக்கீற்றும், இடியின் ஒலியும் தோன்றுவதற்கான கால அளவிலுள்ள வேற்றுமையைக் கணக்கிடும் அளவீடாக அமைந்திருந்த ஆய்வு அது. ஒளி, ஒலி வேகங்களின் வேக வேறுபாட்டைக் கணக்கிட நீண்ட தூரச் செயல்பாட்டிற்குரிய பீரங்கி ஒன்றை அவர் பயன்படுத்தினார். அவர் தமது கடிகாரத்தைப் பயன்படுத்தி இரண்டு நேரங்களைக் குறித்துக் கொண்டார்; முதலாவது பீரங்கி வெடிப்பதும் அதன் ஒளி தோன்றுவதுமான நேரம்; அடுத்தது பீரங்கி எழுப்பும் வெடிப்பொலி கேட்கும் நேரம். இரு நேரங்களுக்கு இடையேயான நேர வேறுபாடு, பீரங்கிக்கும் அவர் நின்றிருக்கும் இடத்திற்கும் இடையேயுள்ள தூரம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு நொடிக்கு ஒலி பயணம் செய்யும் தூரம் அதாவது ஒலியின் வேகம் எவ்வளவு என்பதைக் கண்டறிந்தார்.நியூட்டனுக்குப் பின்னர் சுமார் 130 ஆண்டுகள் கழித்து, காற்றின் வெப்பநிலை பற்றி, பிரெஞ்சுக் கணிதவியல் அறிஞர் லாப்லாஸ் என்பவர் கண்டறிந்தார். ஒலியின் வேகத்தில் வெப்பநிலைக்கு முக்கிய பங்கிருப்பதாகத் தமது ஆய்வுகள் வாயிலாக அவர் வெளிப்படுத்தினார். குளிர்ந்த காற்றை விட வெப்பக் காற்றில் ஒலி விரைந்து செல்வதாக அவர் கூறினார். காற்றில், கடல் மட்டத்தில், 0o செ.கி. வெப்ப அளவில் ஒலியின் இயல்பான வேகம் (நொடிக்கு 1088 அடி அல்லது மணிக்கு 744 மைல் என்று) இன்று கண்டறியப்பட்டு உள்ளது.

ஒலி அலைகள் எவ்வளவு தூரம் பயணம் செய்யக்கூடியவை? இவ்வினா மிகவும் ஆர்வமூட்டும் ஒன்றாகும். ஒலி பல ஆயிரம் மைல் தூரத்திற்குச் செல்லக்கூடியது என்பது வரலாற்று நிகழ்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய நாட்டில் கிரகடோ தீவுப் பகுதியில் 1883ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு எரிமலை வெடிப்பின் ஒலி உலகின் மூன்றின் ஒரு பகுதிக்குக் கேட்டதாம்.





காற்றின் ஊடே பயணம் செய்யும் போது ஒலி அலைகள் அளவிலும், வடிவத்திலும் ஒளி அலைகளையே ஒத்துள்ளன. கடினமான மலை போன்ற பகுதியை நோக்கிச் செல்லும் ஒலி அலைகள் அதைத் தாக்கி மேற்கொண்டு செல்ல இயலாமல் மீண்டும் தோன்றிய பகுதிக்கே வரும். இந்த எதிர்ச் செயற்பாடுதான் எதிரொலிஎன அழைக்கப்படுகிறது.



1.சகாரா வடஆப்பிரிக்கா 35,00,000

2.கோபி மங்கோலிய-சீனா 5,00,000

3.படகோனியா தெற்கு அர்ஜெண்டீனா 3,00,000

4.லெஹாரி தென் ஆப்பிரிக்கா 2,25,000

5.கிரேட்சாண்டி மேற்கு அவுஸ்ரேலியா 1,50,000

6.சிஹுவாஹுவான் மெக்சிகோ 1,40,000

7.தக்லிமாகன் சீனா 1,40,000

8.கராகும் துருக்மேனிஸ்தான் 1,20,000

9.தார் இந்தியா 1,00,000

10.கிஸில்கும் கஜகஸ்தான்-உஸ்பெக்கிஸ்தான் 1,00,000

வானவியல் > சூரியன்

செப்டம்பர், 2009

சூரியன் தோன்றி 476 கோடி ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். பூமியும் மற்ற கிரகங்களும் சூரியனுடன் சேர்ந்து தோன்றியவை தான்.
ஆதியில் அண்டவெளியில் பிரம்மாண்டமான தூசு முகில் இருந்தது. அது ஒன்று திரள ஆரம்பித்துப் பிறகு வாயு திரளானது. ஈர்ப்பு சக்தி காரணமாக அது உருண்டையாகச் சுருங்க ஆரம்பித்தது. இதனால் ஏற்பட்ட அமுக்கத்தால் இந்த உருண்டையின் மையப் பகுதி மிகுந்த சூடேறியது. மேலும் மேலும் அமுக்கம் அதிகரித்தபோது வெப்பம் 10 மிலியன் டிகிரியாக உயர்ந்தது. இதன் விளைவாக அணுச் சேர்க்கை தொடங்கியது. இப்படியாக சூரியன் தோன்றியது. சூரியன் உருப்பெற ஆரம்பித்தபோது கிரகங்களும் தோன்றின.
சூரியன்: G2V வகை நட்சத்திரம்
 





சூரியன் அதன் ஆயுட்காலத்தில் இப்போது "நடுத்தர வயதை" எட்டியுள்ளது. சூரியன் ஒரு நட்சத்திரம் என்பதை நாம் அறிவோம். நட்சத்திரங்கள் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சூரியன் G2V என்ற வகையைச் சேர்ந்தது. G2 என்பது சூரியனின் வெப்ப அளவைக் குறிக்கும்; V என்பது சூரியனில் ஹைட்ரஜன் ஹீலியமாக மாறும் அணுச் சேர்க்கையைக் குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.



 

விண்வெளி - செயற்கைக்கோள்

 

வானில் விமானம் பறக்க எரிபொருள் தேவை. ராக்கெட் உயரே செல்லவும் எரிபொருள் தேவை. ஆனால் ஓயாமல் பூமியைச் சுற்றிகொண்டிருக்கிற செயற்கைக் கோளுக்கு எந்த எரிபொருளும் தேவை இல்லை.
பூமியைச் சுற்றும் செயற்கைக் கோள்.


செயற்கைக் கோள் ஒரு முறை பூமியைச் சுற்றிவர பல்லாயிரம் கிலோமீட்டர் பறக்க வேண்டும். இப்படியாக அது பல்லாண்டுகள் பூமியைச் சுற்றி வருகிறது. செயற்கைக் கோள் இயற்கையின் விதிகளுக்கு உட்பட்டு, அதாவது பூமியின் ஈர்ப்பு விசையினால், சுற்றி வருகிறது. ஆகவே அதற்கு எரிபொருள் தேவையில்லை.
பூமியைச் சந்திரன் கோடானு கோடி ஆண்டுகளாகச் சுற்றி வருகிறது. சந்திரனில் எந்த எஞ்சினும் இல்லை, எரிபொருளும் இல்லை. சூரியனை பூமி சுற்றி வரவில்லையா, அது போலத்தான்.
ராக்கெட்டானது உயரே சென்று உரிய வேகத்தில் ஒரு செயற்கோளை விண்ணில் செலுத்திய பிறகு அந்த செயற்கைக்கோள் தன் பாட்டுக்கு பூமியைச் சுற்றி வருவதில் வியப்பு ஏதும் இல்லை.
உங்கள் வீட்டு அம்மிக் கல்லை இப்படி விண்வெளியில் செலுத்தினால், அதுவும் செயற்கைக் கோள் போல பூமியைச் சுற்றிக்கொண்டிருக்கும். அம்மிக் கல்லைச் செலுத்துவதாக இருந்தாலும் சரி, நான்கு டன் எடை கொண்ட செயற்கைக் கோளைச் செலுத்துவதாக இருந்தாலும் சரி, ராக்கெட்டை ஒரே குறிப்பிட்ட வேகத்தில் ஏவினால் போதும். எடை அதிகரிக்க அதிகரிக்க மேலும் அதிகத் திறன் கொண்ட ராக்கெட் தேவை, அவ்வளவுதான்.


உலகின் முக்கிய நிகழ்வுகள்!



புதிதாகத் தோன்றிய ஒரு நட்சத்திரத்திலிருந்து (Baby star) மாபெரும் அளவில் தண்ணீர் பீய்ச்சி அடித்துக் கொண்டிருப்பதை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது.



உலகின் மாபெரும் ஆறுகளில் ஒன்றான அமேசான் ஆற்றை இந்த நட்சத்திலிருந்து பீய்ச்சி அடிக்கும் நீர் ஒரு வினாடியில் நிறைத்துவிடும், அந்த அளவுக்கு அதில் நீர் உற்பத்தியாகிக் கொண்டுள்ளது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
பூமியிலிருந்து 750 ஒளி வருடத்துக்கு அப்பால் உள்ளது இந்த நட்சத்திரம். இதன் வயது 100,000 ஆண்டுகள் தான். அதாவது சூரியனை ஒத்துள்ள இந்த நட்சத்திரம் இன்னும் முழுமையாக உருவாகவில்லை. இப்போது தான் உருவாகிக் கொண்டுள்ளது.
பெர்சூயஸ் நட்சத்திர மண்டலத்தில் (constellation perseus) இந்த நட்சத்திரத்தின் வடக்கு-தெற்கு புலத்திலிருந்து அண்ட வெளியில் இந்த நீர் பீய்ச்சி அடித்துக் கொண்டுள்ளது. மணிக்கு 2 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் இந்த நீர் பாய்ந்து கொண்டுள்ளது.
ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ஹெர்ஸ்செல் ஸ்பேஸ் அப்சர்வேட்டரி (Herschel Space Observatory) என்ற வானியல் தொலைநோக்கி இந்த நட்சத்திரத்தை படம் பிடித்துள்ளது. இந்த நட்சத்திரத்தில் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் அணுக்கள் சேர்ந்து தண்ணீர் அணுக்களை (H2O) உருவாக்குகின்றன. ஆனால், நட்சத்திரத்தில் நிலவும் பயங்கர வெப்பத்தால் அவை 1.8 லட்சம் பாரன்ஹீட் அளவுக்கு சூடாகி வாயுவாக மாறுகின்றன. பின்னர் நட்சத்திரத்திலிந்து இந்த வாயு அதிவேகத்தில் வெளியேறுகிறது. வெளியில் அண்ட வெளியில் நிலவும் மிகக் குளுமையான சூழலால் இந்த வாயு மீண்டும் நீராக மாறி அண்டவெளியில் பல கோடி கி.மீ. தூரத்துக்கு பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகிறது என்கின்றனர் இந்த ஹெர்ஸ்செல் ஸ்பேஸ் அப்சர்வேட்டரியை இயக்கி வரும் நெதர்லாந்து நாட்டின் லெய்டன் பல்கலைக்கழக வானியல் விஞ்ஞானிகள்.
உயிர்கள் உருவாகவும், உயிர்கள் நிலைக்கவும் மிக முக்கிய காரணியான நீர் பூமிக்கு எப்படி வந்தது என்பது குறித்து பல யூகங்கள் உள்ளன. இப்போது, இந்த நட்சத்திரத்தில் நீர் உருவாவது, பூமிக்கு ஏதாவது ஒரு நடத்திரத்திலிருந்து நீர் வந்திருக்கலாமோ என்ற யூகத்தை வலுப்படுத்தியுள்ளது. அந்த நட்சத்திரம் நமது சூரியனாகக் கூட இருக்கலாம் என்கிறார்கள். நட்சத்திரங்கள் உருவாகும்போது நீர் உருவாவது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது சூரியனும் ஒரு நட்சத்திரமே என்ற அடிப்படையில், பூமிக்கு சூரியனிலிருந்து நீர் வந்திருக்கலாம் என்கிறார்கள்.

பொது அறிவு-1





1.
அருணகிரிநாதர் எந்த ஊரில் அவதரித்தார் ?


2.
கம்பளிக்காக வளர்க்கப்படும் அடுகளுக்கு பெயர் என்ன ?


3
உலக அமைதிக்கான நோபல் பரிசு யாரால் சிபாரிசு
 
செய்யப்படுகிறது ?


4.’
கருடாஎன்ற பெயர் கொண்ட விமானசேவை எந்த நாட்டில்
 
இருந்து இயங்குகிறது ?


5.
வெங்காயத்தில் அதிகமுள்ள வைட்டமின் எது ?


6.
மனிதனைப்போல் தலையில் வழுக்கை விழும் குரங்கு எது ?


7.
முதல் மோட்டார் ரோடுரோலர் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது?


8.’
செலினியம் செல்என்ற போட்டோ முறையை
 
கண்டுபிடித்தவர் யார் ?


9.
உயிரியல் கவிஞர் என்றழைக்கப்படுபவர் யார் ?









பதில்கள்:

1.100
கோடி

2.திருவண்ணாமலை ,

3.மரினோ,

4.
நார்வே அரசு,

5.இந்தோனேஷியா,

6.வைட்டமின்பி’,

7.
ஆண் குரங்கு,

8.இங்கிலாந்து,

9.எர்னஸ்ட் வெர்னர்

10.
சர் ஜெகதீஸ் சந்திர போஸ்.

இயற்பியல்




21. பிரஷர்குக்கரில் (அழுத்த சமைப்பான்) நீரின் கொதி நிலை

. 100o C
. 110o C
. 120o C
. 130o C

22. ஒரு மின் விளக்கின் ஆயுள்

. 1,000 மணிகள்
. 1,500 மணிகள்
. 2,000 மணிகள்
. 2,500 மணிகள்

23. மிதிவண்டி மின் இயக்கி செயல்படும் தத்துவம்

. வலக்கை பெருவிரல் விதி
. மின்காந்த தூண்டல்
. காந்த தூண்டல்
. இடக்கை விதி

24. ஒரு பொருள் திட நிலையில் இருந்து நேரடியாக வாயு நிலைக்கு மாறும் நிகழ்வு

. ஆவியாதல்
. உருகுதல்
. உறைதல்
. பதங்கமாதல்

25. ஆவியாதல் திரவத்தின் எப்பகுதியில் நிகழும்

. திரவத்தின் நடுப்பகுதியில்
. திரவத்தின் அடிப்பகுதியில்
. திரவத்தின் மேற்பரப்பில்
. திரவத்தின் மேற்பரப்பு மற்றும் அடிப்பகுதியில்

26. ஈரம் மிகுந்த காற்றில் உலர்ந்த காற்றை விட ஒலி

. வேகமாக பரவும்
. மெதுவாக பரவும்
. மாற்றம் இல்லை
. அனைத்தும் தவறு



புவியியல்



21. நைல் நதி கலக்கும் கடல்

. செங்கடல்
. கருங்கடல்
. மத்திய தரைக்கடல்
. பிரிட்டன்

22. 'பேந்தலாசா' என்பது

. ஒரு மலை
. நிலப்பரப்பு
. ஒரு கண்டம்
. நீர்ப்பரப்பு

23. 'டால்' ஏரியின் அமைவிடம்

. காஷ்மீர் பள்ளத்தாக்கு
. கங்கை வடிநிலப்பகுதி
. இமாச்சல பிரதேசம்
. ராஜஸ்தான்

24. 'வேரவால்' துறைமுகம் அமைந்துள்ள மாநிலம்

. குஜராத்
. கர்நாடகா
. ஒரிசா
. கேரளா

25. தீபகற்ப இந்தியாவில் கிழக்கு நோக்கி பாயும் ஆறு எது?

. தபதி
. நர்மதை
. மகாநதி
. எதுவுமில்லை

26. ரூர்கேலா இரும்பு எக்கு ஆலைக்கு அருகிலுள்ள துறைமுகம் எது?

. ஹால்தியா
. காண்ட்லா
. பாரதீப்
. விசாகப்பட்டினம்

27. அரபிக் கடல் பின்வரும் நாடுகளில் எதன் கரையை தொடுகிறது?

. சவுதி அரேபியா
. ஓமன்
. கென்யா
. ஈராக்

28. இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளில் பகுதிகளைக் கொண்டிருப்பது எது?

. புதுச்சேரி
. கேரளா
. ஆந்திரப் பிரதேசம்
. மகாராஷ்டிரா

29. குக்டி வனவிலங்கு சரணாலயம் எங்குள்ளது?

. மகாராஷ்டிரா
. ஜம்முகாஷ்மீர்
. இமாச்சல பிரதேசம்
. உத்தராஞ்சல்

30. 200 ஆண்டு கால சரித்திரத்தைக் கொண்ட டெஹ்ரி நகரத்தில் ஓடும் ஆறு எது?

. நர்மதா
. அலக்நந்தா
. பாகீரதி
. கோசி

உயிரியல்


1. பூக்கும் தாவரத்தின் பெயர்

. கிரிப்டோ கேம்கள்
. பெனரோ கேம்கள்
. தலோஃபைட்டா
. பிரையோஃபைட்டா

2. மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்த பயன்படும் தாவரம்

. புல்
. கீழாநெல்லி
. அவரை
. செம்பருத்தி

3. தாவர வைரஸ்களில் காணப்படுவது

. ஆர்.என்..
. டி.என்..
. ஆர்.என்.. மற்றும் டி.என்.
. இவற்றில் எதுவுமில்லை

4. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடுக்கவும்

. வைரஸ்கள் நேனோமீட்டர் அல்லது மில்லிமீட்டர் என்ற அலகில் அளக்கப்படுகிறது
. தாவர வைரஸ்களில் மிகச்சிறியது சாட்டிலைட் வைரஸ்
. பாக்டீரியாவை அழிக்கும் வைரஸ் பாக்டீரியோ பேஜ்
. அனைத்தும் சரி

5. சரியான கூற்றை தேர்ந்தெடு:

. தாவரங்களில் உணவை கடத்தும் திசுக்கள் - புளோயம்
. தாவரங்களில் நீரை கடத்தும் திசுக்கள் - சைலம்
. செல்லின் ஆற்றல் மையம் மைட்டோ காண்டீரியா
. அனைத்தும் சரி

6. வேரூன்றிய நீர்வாழ் தாவரத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு

. லெம்னா
. உல்ஃபியா
. அல்லி
. சால்வீனியா

7. பூஞ்சைகளின் வெஜிடேடிங் நிலைக்கு

. தாலஸ்
. ஹைப்பா
. குறு இழை
. மைஸீரியம்

8. பூஞ்சைகளைப் பற்றிய தாவரவியல் பிரிவு

. அனாடமி
. எம்பிரியாலஜி
. மைக்காலஜி
. சைட்டாலஜி

9. தாவரத்தின் ஆண்பாகம் என்பது

. புல்லி
. சூலகம்
. அல்லி
. மகரந்த தாள் வட்டம்

10. கூட்டுயிரி வாழ்க்கையில் பொதுப் பயன்களைப் பெற்று வாழும் பூஞ்சை

. ரைசோபஸ்
. லைக்கன்கள்
. செர்க்கோஸ்போரா
. அகாரிகஸ்

பாரதிதாசனின் எந்த நூலுக்கு சாகிதியஅகடமி விருது வழங்கப்பட்டது?




1.புகழ் பெற்ற லைலா மஜ்னு காதல் காவியத்தின் ஆசிரியர் யார்?


2.
ஆகஸ்ட் 15 -ம் தேதி விடுதலை பெற்ற மற்றொரு நாடு எது ?


3.
சீனாவின் முக்கிய பத்திரிகையின் பெயர் என்ன ?


4.
பாரதீப் துறைமுகம் எந்த மாநிலத்தில் உள்ளது ?


5.
மிகவும் வேகமாக ஓடக்கூடிய மிருகம் எது ?


6.
இங்கிலாந்து ஒலிபரப்பு நிலையமான பி.பி.சி எப்போது
 
ஆரம்பிகப்பட்டது ?




7.
பழமையான உரோமின் காலண்டர் எத்தனை மாதங்களை
 
கொண்டுள்ளது ?


8.
கால்பந்தாட்டம் எப்போது ஒலிம்பிக்-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது?


9.
பாரதிதாசனின் எந்த நூலுக்கு சாகிதியஅகடமி விருது
 
வழங்கப்பட்டது?


10.
எக்ஸ்ரே -வை கண்டுபிடித்தவர் யார் ?





பதில்கள்:


1.
நிஜாமி,

2.தென்கொரியா,

3.பீபிள்ஸ் டெய்லி,

4.ஓரிஸ்ஸா,

5.
சிறுத்தை : 70 மைல்,

6.1922,

7.10 மாதம்,

8.1900
ஆண்டு,

9.பிசிராந்தையார்,

10.W.C.ரான்ட்ஜன்.



வானவியல் > சந்திரன்

ஜூலை, 2009

அமாவாசையன்று அதிகாலை கிழக்குத் திசையில் வழக்கம்போல் சூரிய உதயத்தைக் காணலாம். அமாவாசையன்று கிழக்குத் திசையில் சூரியன் மட்டுமன்றி சூரியனுடன் சேர்ந்து சந்திரனும் உதிக்கிறது. மாலையில் சூரியனுடன் சேர்ந்து அஸ்தமனமாகி விடுகிறது.





ஆனால் சூரியனின் பிரகாசம் காரணமாக சூரியனுடன் சேர்ந்து உதிக்கிற சந்திரனை நம்மால் காணமுடியவில்லை. உங்கள் கண்களுக்கு அபூர்வ சக்தி இருந்து ஒரு வேளை சந்திரன் - சூரியனின் அருகே - தெரிந்தாலும் அது ஒளியற்றதாக அருவம் போல மங்கலாகத்தான் தெரியும்.
உதாரணமாக மே 31, 2003 அமாவாசை. அன்று சூரிய உதய நேரம் காலை 5-41. சந்திரனின் உதய நேரம் காலை 5-36.
அமாவாசை கழிந்த மறுநாள் சந்திரன் சற்று தாமதமாக உதிக்கும். அதற்கு மறுநாள் மேலும் தாமதமாக உதிக்கும். இப்படியே சென்று 14 நாட்களுக்குப் பிறகு சந்திரன், சூரியன் உதித்து சுமார் 12 மணி நேரம் கழித்து - அதாவது மாலையில், கிழக்குத் திசையில் - உதிக்கும். அப்போது அது முழு நிலவாகத் தெரியும் (பெளர்ணமி).

 



Nationalized patriotic symbols