சமுதாயத்தில் வளர்ந்துள்ள கயவர்களின் செல்வாக்கினையும், போலி அரசியல்வாதிகளின் வெறுக்கத்தக்க முன்னேற்றத்தை ஒழிக்க வேண்டும்- மு.வரதராசனார் !

Thursday, December 15, 2011

வல்லெழுத்து மிகா இடங்கள்:


வல்லெழுத்து மிகா இடங்கள்:
          கீழ்வரும் உதாரணங்களின் படி இரு சொற்கள் சேரும்போது, இரண்டாவது சொல்லின் முதலில் வரும் எழுத்து "க், ச், த், ப்," முதலிய நான்கு மெய்யெழுத்துகளில் உருவான உயிர் மெய்யெழுத்துக்களாக இருப்பின் (உம் - , கா, , சா, , தா, , பா முதலானவை) நடுவிலே க், ச், த், ப் ஆகிய வல்லின மெய்யெழுத்துக்கள் சில விதிகளின் படி, சில சொற்களில் மட்டும் நடுவில் சேருமிடங்களையே வல்லெழுத்து மிகுதல் என்கிறோம். தேர்வுகளிலும், கட்டுரைகளிலும் மாணவர்கட்கு மதிப்பெண்கள் குறைவதற்கு முக்கிய காரணம் வல்லெழுத்து மிகும்/மிகா இடங்களை அறியாமையே. சாதாரணமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விதிகள் மட்டுமே இங்கு விளக்கப் பட்டிருக்கிறது. இவற்றை நினைவு கொண்டாலே பெரும்பால பிழைகளை நீக்கிவிடலாம். :-
  1. வல்லெழுத்து மிகா உதாரணங்கள்::-
    அத்தனை, இத்தனை, எத்தனை, அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு, அவை, அது, இவை, இது, எவை, எது, யாவை, ஏது.

§  அத்தனை + பெரியது = அத்தனை பெரியது.
§  இத்தனை + சிறியது = இத்தனை சிறியது.
§  எத்தனை + தூரம் = எத்தனை தூரம்?
§  அவ்வளவு + கருணை = அவ்வளவு கருணை.
§  இவ்வளவு + கோபம் = இவ்வளவு கோபம்.
§  எவ்வளவு + தூரம் = எவ்வளவு தூரம்?
§  அவை + பெரியவை = அவை பெரியவை.
§  அது + பெரியது = அது பெரியது.
§  இவை + சிறியவை = இவை சிறியவை.
§  இது + சிறியது = இது சிறியது.
§  எவை + தந்தன = எவை தந்தன?
§  எது + தந்தது = எது தந்தது?
§  யாவை + பெரியவை = யாவை பெரியவை?
§  ஏது + கடல் = ஏது கடல்?

  1. ஒற்றெழுத்து மிகாத சில முக்கியமான இலக்கணக் குறிப்புகள்::-
           எழுவாய்த் தொடர்களில் (முதல் வேற்றுமை), ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிர்த்து பிற பெயரெச்சங்களில், வினைத்தொகைகளில், உம்மைத்தொகைகளில், "த்த", "ந்து" என முடியும் சொற்களையடுத்து ஒற்று மிகாது. உதாரணங்கள் கீழே தரப்பட்டுள்ளன. :- -

1.      எழுவாய்த் தொடர் (முதல் வேற்றுமை):-

(
-ம்)
அவர் + படித்தார் = அவர் படித்தார்,
கனிமொழி + சிரித்தாள் = கனிமொழி சிரித்தாள்,
2.      ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிர பிற பெயரெச்சங்கள்:-

(
-ம்)
நல்ல + பாம்பு = நல்ல பாம்பு
அடித்த + புயல் = அடித்த புயல்
3.      வினைத் தொகைகள்:-

(
-ம்)
ஊறு + காய் = ஊறுகாய்
வளர் + பிறை =வளர்பிறை
4.      உம்மைத் தொகைகள்:-

(
-ம்)
இரவு + பகல் = இரவு பகல் (இரவும் பகலும்) சேர +சோழ + பாண்டியர் = சேர சோழ பாண்டியர் (சேரரும், சோழரும், பாண்டியரும்)
5.      "த்த, ந்து" என முடியும் சொற்கள்:-

(
-ம்)

பார்த்த + பெண் = பார்த்த பெண்
வந்து + சென்றாள் = வந்து சென்றாள்
தொகை வகைகள்

தொகையென்பது யாது?

          இரு சொற்கள் சேர்ந்து வருவது தமிழிலக்கணத்தில் தொகையெனப்படும். (-ம்) செந்தாமரை (செம்மை+தாமரை). தொகைகள்: வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, இருபெயரொட்டுப் பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை என்று பலவகைப்படும். அவை பின்வருமாறு:-
  1. வேற்றுமைத் தொகை:
          இரு சொற்களுக்கிடையே "", "ஆல்", "கு", "இன்", "அது", "கண்" முதலான உருபுகள் மறைந்திருக்குமானால் அது வேற்றுமைத் தொகையாம்: -
எடுத்துக்காட்டு:-

                                                      1.            இரண்டாம் வேற்றுமை:
(
-கா)தமிழ் கற்றான் - "" மறைந்துள்ளது.
இரண்டாம் வேற்றுமையுருபும் பயனும் உடன் தொக்கத்தொகையும்:-
(
-கா): தயிர்க்குடம் - "" உருபும், உடைய எனும் சொல்லும் மறைந்துள்ளன.
                                                      2.            மூன்றாம் வேற்றுமை:
(
-கா)தலை வணங்கினான் - "ஆல்" மறைந்துள்ளது
மூன்றாம் வேற்றுமையுருபும் பயனும் உடன் தொக்கத்தொகையும்:-
(
-கா): பொற்குடம் - "ஆல்" உருபும் செய்த எனும் பயனும் மறைந்துள்ளது.
                                                      3.            நான்காம் வேற்றுமை:
(
-கா)நோய் மருந்து - "கு" மறைந்துள்ளது.
                                                      4.            ஐந்தாம் வேற்றுமை:
(
-கா)மலையருவி - "இல்" () "இன்" மறைந்துள்ளது
ஐந்தாம் வேற்றுமையுருபும் பயனும் உடன் தொக்கத்தொகையும்:-
(
-கா)புண்ணீர் - "இல்" எனும் உருபும் இருந்து என்னும் பயனும் மறைந்துள்ளன
                                                      5.            ஆறாம் வேற்றுமை:
(
-கா)தமிழர் பண்பு - "அது" மறைந்துள்ளது
(
-கா)அவன் வண்டி - "உடைய" மறைந்துள்ளது
                                                      6.            ஏழாம் வேற்றுமை:
(
-கா)மணி ஒலி - "கண்" மறைந்துள்ளது
ஏழாம் வேற்றுமையுருபும் பயனும் உடன் தொக்கத்தொகையும்:-
(
-கா)வயிற்றுத்தீ - "கண்" உருபும், தோன்றிய என்னும் பயனும் மறைந்துள்ளன.

  1. வினைத்தொகை:-
          இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களூம் இருசொற்களுக்கு இடையில் மறைந்திருப்பின் இவை வினைதொகை எனப்படும். எளியவழி: (1) இத்தொகையில் இரு சொற்களே இருக்கும் (2) முதலில் இருக்கும் சொல் வினைச் சொல்லாக இருக்கும் (3) இரண்டாவது சொல் பெயர்ச்சொல்லாகவும் இருக்கும்:-

§  (-கா)
"சுடுசோறு" -
சுடுகின்ற சோறு (நிகழ்காலம்)
சுட்ட சோறு (இறந்தகாலம்)
சுடும் சோறு (எதிர்காலம்)
                        பண்புத்தொகையும் இருபெயரொட்டுப் பண்புத்தொகையும்:-
          பண்புப் பெயர்ச்சொற்களுடன் வேறு பெயர்ச்சொல் சேர்ந்து வருமாயின் அவை பண்புத்தொகையெனப்படும். அதுபோல இரண்டு சொற்கள் கொண்ட ஒரு பண்புத்தொகையில் முதலில் வரும் சொல் சிறப்புப் பெயர்ச்சொல்லாகவும் இரண்டாவது வரும் பெயர்ச்சொல் பொதுப்பெயர்ச்சொல்லாகவும் இருப்பின் அது இருபெயரொட்டுப் பண்புத்தொகையெனப்படும்:-
பண்பாவன: குணம்(நன்மை, தீமை), உருவம்(வட்டம், சதுரம்), நிறம்(நீலம், பசுமை), எண்ணம்(ஒன்று, பத்து), சுவை(துவர், காரம்).

§  (-கா)
பண்புத்தொகை:
"பண்புத்தொகை" "சேவடி", "செங்கண்", "நெடுங்கடல்", "மூதூர்", "தண்தயிர்", "பைந்தொடி", "வெண்சிலை", "நாற்படை"
§  (-கா)
இருபெயரொட்டுப் பண்புத்தொகை:
"கைத்தலம்" "பலாமரம்", "மடித்தலம்", "இந்தியநாடு", "விற்படை", "வெண்தயிர்", "ஒண்டொடி", "கருஞ்சிலை", "நாற்படை"

                        உவமைத் தொகை:-
          உவமைத் தொகை கண்டுபிடிக்க (1) இரு சொற்களுள்ள தொகைச் சொல்லாக இருக்கவேண்டும். அதில் முதற்சொல் ஒரு உவமைச்சொல்லாக இருத்தல் வேண்டும். இதுவே உவமைத்தொகை

§  (-கா)
பானைவாய்:
இதில் பானை என்பது உவமை (பானையின் வாயை போன்ற)
§  (-கா)
மேலும் சில எடுத்துக்காட்டுகள்:
"
மதிமுகம்" "மலரடி", "துடியிடை", "கமலக்கண்", "கனிவாய்", "தேன்மொழி", "செங்கண்", "மான்விழி", "வாள்மீசை"-

                        உம்மைத் தொகை:-
          உம்மைத் தொகை கண்டுபிடிக்க (1) சேர்ந்த இரு சொற்களும் தொடர்புள்ள சொல்லாக இருக்கவேண்டும்.(-கா) மாடுகன்று. (2) இரு சொற்களுக்கிடையில் "உம்" சேர்ப்பின், பொருள் சரியாக இருத்தல் வேண்டும். இவ்வாறு இருப்பின் அது உம்மைத்தொகை என்று கொள்க:-

§  (-கா)
சேர சோழ பாண்டியர்:
இதில் சேரரும், சோழரும் , பாண்டியரும் என்று பொருள் தரும்
§  (-கா)
மேலும் சில எடுத்துக்காட்டுகள்:
"
வேண்டுதல் வேண்டாமை" "அருளாண்மை", "தாய்தந்தை", "நரைதிரை", "காயிலைக்கிழங்கு", "கபிலபரணர்"

                        அன்மொழித் தொகை:-
          இதுவரையிற் கூறிய தொகைகளில் அல்லாத சொற்கள் மறைந்துவருமாயின் அது அன்மொழித்தொகையாகும். மேலும் இவ்வன்மொழித்தொகை முன் சொன்ன ஐந்து தொகைகளில் ஒன்றாக இருக்கும். (-கா) "ஆயிழை வந்தாள்" - இதில் ஆயிழையென்பது காலங்காட்டாத வினைத்தொகை (ஆராய்ந்த இழை, ஆராய்கின்ற இழை, ஆராயும் இழை). ஆயின் இவ்விடத்தில் அந்த இழையணிந்த பெண்ணென்று பொருளாததால், இது வினைத்தொகைப் புறத்தெ பிறந்த அன்மொழித்தொகை எனப்படும். இவ்வாறே மற்ற தொகைகளின் புறத்தே இந்த அன்மொழித்தொகை அமைந்திருக்கும்:-

§  மேலும் சில எடுத்துக்காட்டுகள்:
"கோற்றொடியைக் கொன்று என் செய",
"
ஏந்திழை ஈமக் கடனிறுவிப் போது"
"
வீமன் திருமகளாம் மெல்லியலை",
"
ஆயமும் காவலும் ஆயிழை தனக்கு",
"
தந்துயர் காணா தகைசால் பூங்கொடி",
"
விளங்கிழை தமியன் ஆனாள்",
"
அஞ்சொல் இளவஞ்சி அடியெந்தோள் ஏறு"

No comments:

Post a Comment