வல்லெழுத்து மிகா இடங்கள்:
கீழ்வரும் உதாரணங்களின் படி இரு சொற்கள் சேரும்போது, இரண்டாவது சொல்லின் முதலில் வரும் எழுத்து "க், ச், த், ப்," முதலிய நான்கு மெய்யெழுத்துகளில் உருவான உயிர் மெய்யெழுத்துக்களாக இருப்பின் (உம் - க, கா, ச, சா, த, தா, ப, பா முதலானவை) நடுவிலே க், ச், த், ப் ஆகிய வல்லின மெய்யெழுத்துக்கள்
சில விதிகளின் படி, சில சொற்களில் மட்டும் நடுவில் சேருமிடங்களையே
வல்லெழுத்து மிகுதல் என்கிறோம். தேர்வுகளிலும், கட்டுரைகளிலும் மாணவர்கட்கு மதிப்பெண்கள் குறைவதற்கு முக்கிய காரணம் வல்லெழுத்து மிகும்/மிகா இடங்களை அறியாமையே. சாதாரணமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விதிகள் மட்டுமே இங்கு விளக்கப் பட்டிருக்கிறது. இவற்றை நினைவு கொண்டாலே பெரும்பால பிழைகளை நீக்கிவிடலாம். :-
- வல்லெழுத்து மிகா உதாரணங்கள்::-
அத்தனை, இத்தனை, எத்தனை, அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு, அவை, அது, இவை, இது, எவை, எது, யாவை, ஏது.
§ அத்தனை + பெரியது = அத்தனை பெரியது.
§ இத்தனை + சிறியது = இத்தனை சிறியது.
§ எத்தனை + தூரம் = எத்தனை தூரம்?
§ அவ்வளவு + கருணை = அவ்வளவு கருணை.
§ இவ்வளவு + கோபம் = இவ்வளவு கோபம்.
§ எவ்வளவு + தூரம் = எவ்வளவு தூரம்?
§ அவை + பெரியவை = அவை பெரியவை.
§ அது + பெரியது = அது பெரியது.
§ இவை + சிறியவை = இவை சிறியவை.
§ இது + சிறியது = இது சிறியது.
§ எவை + தந்தன = எவை தந்தன?
§ எது + தந்தது = எது தந்தது?
§ யாவை + பெரியவை = யாவை பெரியவை?
§ ஏது + கடல் = ஏது கடல்?
- ஒற்றெழுத்து மிகாத சில முக்கியமான இலக்கணக் குறிப்புகள்::-
எழுவாய்த் தொடர்களில் (முதல் வேற்றுமை), ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிர்த்து பிற பெயரெச்சங்களில், வினைத்தொகைகளில், உம்மைத்தொகைகளில், "த்த", "ந்து" என முடியும் சொற்களையடுத்து
ஒற்று மிகாது. உதாரணங்கள் கீழே தரப்பட்டுள்ளன. :- -
1.
எழுவாய்த் தொடர்
(முதல் வேற்றுமை):-
(உ-ம்)
அவர் + படித்தார் = அவர் படித்தார்,
கனிமொழி + சிரித்தாள் = கனிமொழி சிரித்தாள்,
(உ-ம்)
அவர் + படித்தார் = அவர் படித்தார்,
கனிமொழி + சிரித்தாள் = கனிமொழி சிரித்தாள்,
2.
ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிர பிற பெயரெச்சங்கள்:-
(உ-ம்)
நல்ல + பாம்பு = நல்ல பாம்பு
அடித்த + புயல் = அடித்த புயல்
(உ-ம்)
நல்ல + பாம்பு = நல்ல பாம்பு
அடித்த + புயல் = அடித்த புயல்
3.
வினைத் தொகைகள்:-
(உ-ம்)
ஊறு + காய் = ஊறுகாய்
வளர் + பிறை =வளர்பிறை
(உ-ம்)
ஊறு + காய் = ஊறுகாய்
வளர் + பிறை =வளர்பிறை
4.
உம்மைத் தொகைகள்:-
(உ-ம்)
இரவு + பகல் = இரவு பகல் (இரவும் பகலும்) சேர +சோழ + பாண்டியர் = சேர சோழ பாண்டியர் (சேரரும், சோழரும், பாண்டியரும்)
(உ-ம்)
இரவு + பகல் = இரவு பகல் (இரவும் பகலும்) சேர +சோழ + பாண்டியர் = சேர சோழ பாண்டியர் (சேரரும், சோழரும், பாண்டியரும்)
5.
"த்த, ந்து" என முடியும் சொற்கள்:-
(உ-ம்)
பார்த்த + பெண் = பார்த்த பெண்
வந்து + சென்றாள் = வந்து சென்றாள்
(உ-ம்)
பார்த்த + பெண் = பார்த்த பெண்
வந்து + சென்றாள் = வந்து சென்றாள்
தொகை வகைகள்
தொகையென்பது யாது?
இரு சொற்கள் சேர்ந்து வருவது தமிழிலக்கணத்தில் தொகையெனப்படும். (உ-ம்) செந்தாமரை (செம்மை+தாமரை). தொகைகள்: வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, இருபெயரொட்டுப் பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை என்று பலவகைப்படும். அவை பின்வருமாறு:-
- வேற்றுமைத் தொகை:
இரு சொற்களுக்கிடையே "ஐ", "ஆல்", "கு", "இன்", "அது", "கண்" முதலான உருபுகள் மறைந்திருக்குமானால் அது வேற்றுமைத் தொகையாம்: -
எடுத்துக்காட்டு:-
1.
இரண்டாம் வேற்றுமை:
(எ-கா)தமிழ் கற்றான் - "ஐ" மறைந்துள்ளது.
இரண்டாம் வேற்றுமையுருபும் பயனும் உடன் தொக்கத்தொகையும்:-
(எ-கா): தயிர்க்குடம் - "ஐ" உருபும், உடைய எனும் சொல்லும் மறைந்துள்ளன.
(எ-கா)தமிழ் கற்றான் - "ஐ" மறைந்துள்ளது.
இரண்டாம் வேற்றுமையுருபும் பயனும் உடன் தொக்கத்தொகையும்:-
(எ-கா): தயிர்க்குடம் - "ஐ" உருபும், உடைய எனும் சொல்லும் மறைந்துள்ளன.
2.
மூன்றாம் வேற்றுமை:
(எ-கா)தலை வணங்கினான் - "ஆல்" மறைந்துள்ளது
மூன்றாம் வேற்றுமையுருபும் பயனும் உடன் தொக்கத்தொகையும்:-
(எ-கா): பொற்குடம் - "ஆல்" உருபும் செய்த எனும் பயனும் மறைந்துள்ளது.
(எ-கா)தலை வணங்கினான் - "ஆல்" மறைந்துள்ளது
மூன்றாம் வேற்றுமையுருபும் பயனும் உடன் தொக்கத்தொகையும்:-
(எ-கா): பொற்குடம் - "ஆல்" உருபும் செய்த எனும் பயனும் மறைந்துள்ளது.
3.
நான்காம் வேற்றுமை:
(எ-கா)நோய் மருந்து - "கு" மறைந்துள்ளது.
(எ-கா)நோய் மருந்து - "கு" மறைந்துள்ளது.
4.
ஐந்தாம் வேற்றுமை:
(எ-கா)மலையருவி - "இல்" (அ) "இன்" மறைந்துள்ளது
ஐந்தாம் வேற்றுமையுருபும் பயனும் உடன் தொக்கத்தொகையும்:-
(எ-கா)புண்ணீர் - "இல்" எனும் உருபும் இருந்து என்னும் பயனும் மறைந்துள்ளன
(எ-கா)மலையருவி - "இல்" (அ) "இன்" மறைந்துள்ளது
ஐந்தாம் வேற்றுமையுருபும் பயனும் உடன் தொக்கத்தொகையும்:-
(எ-கா)புண்ணீர் - "இல்" எனும் உருபும் இருந்து என்னும் பயனும் மறைந்துள்ளன
5.
ஆறாம் வேற்றுமை:
(எ-கா)தமிழர் பண்பு - "அது" மறைந்துள்ளது
(எ-கா)அவன் வண்டி - "உடைய" மறைந்துள்ளது
(எ-கா)தமிழர் பண்பு - "அது" மறைந்துள்ளது
(எ-கா)அவன் வண்டி - "உடைய" மறைந்துள்ளது
6.
ஏழாம் வேற்றுமை:
(எ-கா)மணி ஒலி - "கண்" மறைந்துள்ளது
ஏழாம் வேற்றுமையுருபும் பயனும் உடன் தொக்கத்தொகையும்:-
(எ-கா)வயிற்றுத்தீ - "கண்" உருபும், தோன்றிய என்னும் பயனும் மறைந்துள்ளன.
(எ-கா)மணி ஒலி - "கண்" மறைந்துள்ளது
ஏழாம் வேற்றுமையுருபும் பயனும் உடன் தொக்கத்தொகையும்:-
(எ-கா)வயிற்றுத்தீ - "கண்" உருபும், தோன்றிய என்னும் பயனும் மறைந்துள்ளன.
- வினைத்தொகை:-
இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களூம் இருசொற்களுக்கு இடையில் மறைந்திருப்பின் இவை வினைதொகை எனப்படும். எளியவழி: (1) இத்தொகையில் இரு சொற்களே இருக்கும் (2) முதலில் இருக்கும் சொல் வினைச் சொல்லாக இருக்கும் (3) இரண்டாவது சொல் பெயர்ச்சொல்லாகவும் இருக்கும்:-
§ (எ-கா)
"சுடுசோறு" -
சுடுகின்ற சோறு (நிகழ்காலம்)
சுட்ட சோறு (இறந்தகாலம்)
சுடும் சோறு (எதிர்காலம்)
"சுடுசோறு" -
சுடுகின்ற சோறு (நிகழ்காலம்)
சுட்ட சோறு (இறந்தகாலம்)
சுடும் சோறு (எதிர்காலம்)
பண்புத்தொகையும் இருபெயரொட்டுப் பண்புத்தொகையும்:-
பண்புப் பெயர்ச்சொற்களுடன்
வேறு பெயர்ச்சொல் சேர்ந்து வருமாயின் அவை பண்புத்தொகையெனப்படும். அதுபோல இரண்டு சொற்கள் கொண்ட ஒரு பண்புத்தொகையில் முதலில் வரும் சொல் சிறப்புப் பெயர்ச்சொல்லாகவும் இரண்டாவது வரும் பெயர்ச்சொல் பொதுப்பெயர்ச்சொல்லாகவும் இருப்பின் அது இருபெயரொட்டுப் பண்புத்தொகையெனப்படும்:-
பண்பாவன:
குணம்(நன்மை, தீமை), உருவம்(வட்டம், சதுரம்), நிறம்(நீலம், பசுமை),
எண்ணம்(ஒன்று, பத்து),
சுவை(துவர், காரம்).
§ (எ-கா)
பண்புத்தொகை:
"பண்புத்தொகை" "சேவடி", "செங்கண்", "நெடுங்கடல்", "மூதூர்", "தண்தயிர்", "பைந்தொடி", "வெண்சிலை", "நாற்படை"
பண்புத்தொகை:
"பண்புத்தொகை" "சேவடி", "செங்கண்", "நெடுங்கடல்", "மூதூர்", "தண்தயிர்", "பைந்தொடி", "வெண்சிலை", "நாற்படை"
§ (எ-கா)
இருபெயரொட்டுப் பண்புத்தொகை:
"கைத்தலம்" "பலாமரம்", "மடித்தலம்", "இந்தியநாடு", "விற்படை", "வெண்தயிர்", "ஒண்டொடி", "கருஞ்சிலை", "நாற்படை"
இருபெயரொட்டுப் பண்புத்தொகை:
"கைத்தலம்" "பலாமரம்", "மடித்தலம்", "இந்தியநாடு", "விற்படை", "வெண்தயிர்", "ஒண்டொடி", "கருஞ்சிலை", "நாற்படை"
உவமைத் தொகை:-
உவமைத் தொகை கண்டுபிடிக்க (1) இரு சொற்களுள்ள தொகைச் சொல்லாக இருக்கவேண்டும். அதில் முதற்சொல் ஒரு உவமைச்சொல்லாக இருத்தல் வேண்டும். இதுவே உவமைத்தொகை
§ (எ-கா)
பானைவாய்:
இதில் பானை என்பது உவமை (பானையின் வாயை போன்ற)
பானைவாய்:
இதில் பானை என்பது உவமை (பானையின் வாயை போன்ற)
§ (எ-கா)
மேலும் சில எடுத்துக்காட்டுகள்:
"மதிமுகம்" "மலரடி", "துடியிடை", "கமலக்கண்", "கனிவாய்", "தேன்மொழி", "செங்கண்", "மான்விழி", "வாள்மீசை"-
மேலும் சில எடுத்துக்காட்டுகள்:
"மதிமுகம்" "மலரடி", "துடியிடை", "கமலக்கண்", "கனிவாய்", "தேன்மொழி", "செங்கண்", "மான்விழி", "வாள்மீசை"-
உம்மைத் தொகை:-
உம்மைத் தொகை கண்டுபிடிக்க (1) சேர்ந்த இரு சொற்களும் தொடர்புள்ள சொல்லாக இருக்கவேண்டும்.(எ-கா) மாடுகன்று. (2) இரு சொற்களுக்கிடையில் "உம்" சேர்ப்பின், பொருள் சரியாக இருத்தல் வேண்டும். இவ்வாறு இருப்பின் அது உம்மைத்தொகை என்று கொள்க:-
§ (எ-கா)
சேர சோழ பாண்டியர்:
இதில் சேரரும், சோழரும் , பாண்டியரும் என்று பொருள் தரும்
சேர சோழ பாண்டியர்:
இதில் சேரரும், சோழரும் , பாண்டியரும் என்று பொருள் தரும்
§ (எ-கா)
மேலும் சில எடுத்துக்காட்டுகள்:
"வேண்டுதல் வேண்டாமை" "அருளாண்மை", "தாய்தந்தை", "நரைதிரை", "காயிலைக்கிழங்கு", "கபிலபரணர்"
மேலும் சில எடுத்துக்காட்டுகள்:
"வேண்டுதல் வேண்டாமை" "அருளாண்மை", "தாய்தந்தை", "நரைதிரை", "காயிலைக்கிழங்கு", "கபிலபரணர்"
அன்மொழித் தொகை:-
இதுவரையிற் கூறிய தொகைகளில் அல்லாத சொற்கள் மறைந்துவருமாயின்
அது அன்மொழித்தொகையாகும். மேலும் இவ்வன்மொழித்தொகை
முன் சொன்ன ஐந்து தொகைகளில் ஒன்றாக இருக்கும். (எ-கா) "ஆயிழை வந்தாள்" - இதில் ஆயிழையென்பது காலங்காட்டாத வினைத்தொகை (ஆராய்ந்த இழை, ஆராய்கின்ற இழை, ஆராயும் இழை). ஆயின் இவ்விடத்தில் அந்த இழையணிந்த பெண்ணென்று பொருளாததால், இது வினைத்தொகைப் புறத்தெ பிறந்த அன்மொழித்தொகை எனப்படும். இவ்வாறே மற்ற தொகைகளின் புறத்தே இந்த அன்மொழித்தொகை அமைந்திருக்கும்:-
§ மேலும் சில எடுத்துக்காட்டுகள்:
"கோற்றொடியைக் கொன்று என் செய",
"ஏந்திழை ஈமக் கடனிறுவிப் போது"
"வீமன் திருமகளாம் மெல்லியலை",
"ஆயமும் காவலும் ஆயிழை தனக்கு",
"தந்துயர் காணா தகைசால் பூங்கொடி",
"விளங்கிழை தமியன் ஆனாள்",
"அஞ்சொல் இளவஞ்சி அடியெந்தோள் ஏறு"
"கோற்றொடியைக் கொன்று என் செய",
"ஏந்திழை ஈமக் கடனிறுவிப் போது"
"வீமன் திருமகளாம் மெல்லியலை",
"ஆயமும் காவலும் ஆயிழை தனக்கு",
"தந்துயர் காணா தகைசால் பூங்கொடி",
"விளங்கிழை தமியன் ஆனாள்",
"அஞ்சொல் இளவஞ்சி அடியெந்தோள் ஏறு"
No comments:
Post a Comment