நிகண்டு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிகண்டு என்பது சொற்களுக்கான பொருள்களைத் தருவதற்காக ஆக்கப்பட்ட நூல் வகையாகும். தமிழில் அகராதிகளுக்கு முன்னோடியாக இருந்தவை நிகண்டுகள். இந் நூல்கள் ஆரம்பத்தில் உரிச்சொற்பனுவல் என்ற தமிழ்ச் சொல்லால் அழைக்கப்பட்டன. எனினும் இச் சொல் நீளமாக இருந்ததனாலோ அல்லது இடைக் காலத்திலேற்பட்ட வடமொழிச் சொற்பயன்பாட்டு மோகம் காரணமாகவோ நிகண்டு என்ற வடமொழிப் பெயரே பிற்காலத்தில் நிலைபெற்று விட்டது. நிகண்டு என்னும் சொல் தொகை, தொகுப்பு, கூட்டம் என்னும் பொருள் தரும்.நிகண்டு என்னும் நூல்வகைக்கு முன்னோடி போல் அமைந்தது தொல்காப்பியம். தொல்காப்பியர் அருஞ்சொற்களுக்கு மட்டும் பொருள்கூறிச் செல்கிறார். ஒரு சில எடுத்துக்காட்டுகள்:
- உரியியலில் அருஞ்சொற்களாகத் தோன்றியவற்றுக்குப் பொருள் தருகிறார். "வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா, வெளிப்பட வாரா உரிச்சொல் மேன" ("பொருள் வெளிப்படையாகத் தெரிகின்ற சொற்களை விட்டுவிட்டு, பொருள் தெளிவற்ற அரிய சொற்களுக்கு மட்டும் பொருள் கூறுவோம்") என்று குறிப்பிடுகிறார்.
- மரபியலில் இளமைப் பெயர், ஆண்பாற் பெயர், பெண்பாற்பெயர் முதலியவற்றை நிகண்டுகள் போல் தொகுத்துக் கூறி, அவை தமிழ் மரபுப்படி வழங்கும் வழக்கையும் குறிப்பிடுகிறார்.
காலம் | நூல் | ஆசிரியர் |
திவாகரர் | ||
கி.பி. 09ஆம் நூற்றாண்டு | பிங்கலம்(பிங்கலந்தை) | பிங்கலர் |
கி.பி. 11ஆம் நூற்றாண்டு | உரிச்சொல் நிகண்டு | காங்கேயர் |
கி.பி 15ஆம் நூற்றாண்டு | கயாதரம் | கயாதரர் |
கி.பி 15ஆம் நூற்றாண்டு | பாரதி தீபம் | திருவேங்கடபாரதி |
கி.பி 16ஆம் நூற்றாண்டு | சூடாமணி நிகண்டு | மண்டலபுருடர் |
1594 | அகராதி நிகண்டு(சூத்திரவகராதி) | இரேவணசித்தர் |
கி.பி. 16ஆம் நூற்றாண்டு | கைலாச நிகண்டு சூளாமணி | கைலாசம் |
கி.பி. 17ஆம் நூற்றாண்டு | ஆசிரிய நிகண்டு | ஆண்டிப்புலவர் |
1700 | பல்பொருட் சூடாமணி(வடமலை நிகண்டு) | ஈசுர பாரதியார் |
1732 | சதுரகராதி | வீரமாமுனிவர் |
1769 | அரும்பொருள் விளக்க நிகண்டு | அருமருந்தைய தேசிகர் |
கி.பி. 18ஆம் நூற்றாண்டு | உசிதசூடாமணி | சிதம்பரக் கவிராயர் |
கி.பி. 18ஆம் நூற்றாண்டு | பொதிகை நிகண்டு | சாமிநாத கவிராயர் |
கி.பி. 19ஆம் நூற்றாண்டு | நாமதீப நிகண்டு | சிவசுப்பிரமணியக் கவிராயர் |
கி.பி. 19ஆம் நூற்றாண்டு | பொருட்டொகை நிகண்டு | சுப்பிரமணிய பாரதி |
1850 | நாநார்த்த தீபிகை | முத்துசாமிப் பிள்ளை |
1844 | கந்தசுவாமியம் தொகைப் பெயர் விளக்கம் இலக்கத் திறவுகோல் அகராதி மோனைக் ககராதி யெதுகை | சுப்பிரமணிய தீட்சிதர் வேதகிரி முதலியார் |
1874 | சிந்தாமணி நிகண்டு | வைத்தியலிங்கம் பிள்ளை |
1878 | அபிதானத் தனிச்செய்யுள் நிகண்டு | கோபாலசாமி நாயக்கர் |
கி.பி 19ஆம் நூற்றாண்டு | விரிவு நிகண்டு | அருணாசல நாவலர் |
கி.பி. 20ஆம் நூற்றாண்டு | நவமணிக்காரிகை நிகண்டு | அரசஞ் சண்முகனார் |
கி.பி. 20ஆம் நூற்றாண்டு | தமிழுரிச்சொற் பனுவல் | கவிராச பண்டிதர் இராம சுப்பிரமணிய நாவலர் |
| | |
- திவாகர நிகண்டு (திவாகர முனிவர் இயற்றியது)
- பிங்கல நிகண்டு (பிங்கலம் இயற்றியது)
- சூடாமணி நிகண்டு (மண்டலபுருடர் இயற்றியது)
- உரிச்சொல் நிகண்டு (காங்கேயர் இயற்றியது)
- கயாதர நிகண்டு (கயாதர முனிவர் இயற்றியது)
- ஆசிரிய நிகண்டு (ஆண்டிப்புலவர் இயற்றியது)
- அகராதி நிகண்டு (சிதம்பர இரேவண சித்தர் இயற்றியது)
- அகம்பொருள் விளக்க நிகண்டு (அருமந்தைய தேசிகர் இயற்றியது)
- பொதிகை நிகண்டு (சாமிநாத கவிராயர் இயற்றியது)
- பொருள் தொகை நிகண்டு (சுப்பிரமணிய பாரதியார் இயற்றியது)
- நாமதீப நிகண்டு (சிவ சுப்பிரமணியக் கவிராயர் இயற்றியது)
- நானார்த்த தீபிகை (முத்துசாமிப் பிள்ளை இயற்றியது)
- சிந்தாமணி நிகண்டு (வல்வை ச.வைத்திலிங்கம்பிள்ளை இயற்றியது)
- நீரரர் நிகண்டு ( ஈழத்துப் பூராடனார் இயற்றியது)
No comments:
Post a Comment